- உயர்
- கல்வி
- அமைச்சர்
- சென்னை
- சென்னை தலைமைச் செயலகம்
- தென்காசி
- ராமநாதபுரம்
- தர்மபுரி
- பெரம்பலூர்
- மதுரை
- பிறகு நான்
- திண்டுக்கல்
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று தென்காசி, ராமநாதபுரம், தருமபுரி மற்றும் பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டங்களில் ரூ. 16 கோடியே 98 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 5 கல்லூரி விடுதிக் கட்டிடங்கள் மற்றும் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 7 கோடியே 22 லட்சத்தில் உட்கட்டமைப்பு பணிகள் முடிவுற்ற 5 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் ஆகியவற்றை காணொலி காட்சி வாயிலாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.
மேலும், பணிக்காலத்தில் இறந்த 16 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, இளநிலை உதவியாளர் பணிநியமன ஆணைகளையும் அமைச்சர் வழங்கினார். பின்னர் அமைச்சர் ராஜகண்ணப்பன் அளித்த பேட்டியில், கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் நடத்தி முடிக்க வாய்ப்பு உள்ளது. தேர்தல் தேதி அறிவித்தபிறகு செமஸ்டர் தேர்வு குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று தெரிவித்தார்.
The post உயர் கல்வித்துறை அமைச்சர் தகவல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் செமஸ்டர் தேர்வு முடிக்கப்படும் appeared first on Dinakaran.